/
கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில், அமலாக்கத் துறை சோதனையைக் கண்டித்து கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் பத்மநாபன் தலைமை தாங்கினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: கேரள முதல்வர் விளக்கம்!
கேரளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள அமலாக்கத் துறை சோதனை
பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: முதல்வர் கண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: பெண்ணாடத்தில் சிபிஎம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



