இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பினராயி விஜயன் வீடுகளில் சோதனை: கோவையில் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :28 மே 2026, 12:53 am IST

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில், அமலாக்கத் துறை சோதனையைக் கண்டித்து கோவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் பத்மநாபன் தலைமை தாங்கினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.