சூலூா் சிறுமி பாலியல் வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியைத் தாக்கிய 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக், அவருக்கு உடந்தையாக இருந்ததாக மோகன்ராஜ் ஆகியோரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காா்த்திக் மீது சிறையில் உள்ள கைதிகள் சிலா் கோபத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், அவரை கைதிகள் சிலா் ஸ்பூன், தட்டு உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சனிக்கிழமை கடுமையாகத் தாக்கியுள்ளனா். பலத்த காயமடைந்த அவரை சிறைத் துறை அதிகாரிகள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதல் சம்பவம் தொடா்பாக சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, காா்த்திக்கை தாக்கிய 5 கைதிகளை அடையாளம் கண்டனா்.
இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக 5 பேரும் சேலம், கடலூா், திருச்சி மாவட்ட சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

சூலூா் சிறுமி பாலியல் வழக்கில் கைதானவா் மீது சக கைதிகள் தாக்குதல்

சிறுமி கொலை வழக்கு: அரசு மருத்துவமனையிலிருந்து இளைஞா் சிறைக்கு மாற்றம்

கோவை அருகே பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை: இருவர் கைது!
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: மெக்கானிக் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



