48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் யோகா பட்ட படிப்புகள் தொடக்கம்

உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் யோகமும், மனித மாண்பும் பட்ட, பட்டயப் படிப்புகள் தொடக்க விழா ஈரோடு அறிவுத்திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2016, 2:19 am

உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் யோகமும், மனித மாண்பும் பட்ட, பட்டயப் படிப்புகள் தொடக்க விழா ஈரோடு அறிவுத்திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன், இப்படிப்புகளை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, வேதாத்திரி மகரிஷி ஆன்மிக மற்றும் உள்ளுணர்வு கல்வி நிலையம் இதுவரை 29 பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்று சான்றிதழ், பட்டயம், இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், முதுகலை ஆராய்ச்சி, முனைவர் பட்டம் ஆகியவற்றை பயிற்றுவித்து வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
 இதில், உடற்பயிற்சி, தியானப்பயிற்சி, காயகல்ப பயிற்சி, அகத்தாய்வு பயிற்சிகள் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன என்றார்.
 நந்தா பொறியியல் கல்லூரி முதல்வர் என்.ரெங்கராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில், ஈரோடு மனவளக்கலை மன்ற ஈரோடு மண்டலத் தலைவர் ஆர்.சுந்தரம், மன்ற திட்ட அலுவலர்கள் டி.சுமதி, ஆர்.ராதா, பொருளாளர் என்.ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.