வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

போலீஸாருக்கு பேரிடர் வெள்ள மீட்பு மேலாண்மைப் பயிற்சி

தமிழ்நாடு காவல்துறையின் சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி சார்பில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் போலீஸாருக்கான

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:48 pm

DIN

தமிழ்நாடு காவல்துறையின் சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி சார்பில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் போலீஸாருக்கான பேரிடர் வெள்ள மீட்பு மேலாண்மைப் பயிற்சி  ஈரோடு ஆயுதப் படை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 37 போலீஸாரும்,  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 32 போலீஸாரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சென்னை கமாண்டோ பயிற்சிப் பள்ளி ஆய்வாளர் மனோகரன், 3 போலீஸார் பயிற்சி அளித்தனர்.
வெள்ளம், ஆபத்தான நேரங்களில் போலீஸார் எவ்வாறு துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் மூலமும், ஈரோடு ஹோட்டல் கிளப் மேலாஞ்சில் உள்ள நீச்சல் குளத்திலும் போலீஸார் பயிற்சி கொடுத்தனர்.  இதைத் தொடர்ந்து ஆயுதப் படை வளாகத்தில் நடைபெற்ற  நிறைவு விழாவில், ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வடுகம் இரா.சிவகுமார், பயிற்சியில் ஈடுபட்ட போலீஸாருக்கு அறிவுரை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.