மொடக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தாலுகா கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும். வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். குடிநீர்ப் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க நிர்வாகிகள் கற்பகம், பழனிசாமி, சேகர், ராசு, அண்ணாதுரை, சித்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.