பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கள் இயக்கக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அசுவமேத யாகம் நடத்தப்படும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி

கள் இயக்க கோரிக்கைகளை ஏற்காவிட்டால் சென்னையில் அசுவமேத யாகம் நடத்தப்படும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறினார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கள் இயக்க கோரிக்கைகளை ஏற்காவிட்டால் சென்னையில் அசுவமேத யாகம் நடத்தப்படும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறினார்.
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் பனை, தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணத்தை அதன் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கோவையில் திங்கள்கிழமை தொடங்கினார். கோவையில் இருந்து ஈரோடு வந்த அவர் மேலும் கூறியதாவது:
கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இது உலகளாவிய நடைமுறையாகும். எனவே, 30 ஆண்டுகால கள் தடையை நீக்க வேண்டும். நிபந்தனைகள் இல்லாமல் நீரா இறக்கி, உள்நாட்டிலும், உலக அளவிலும் அரசின் தலையீடு இல்லாமல் சந்தைப்படுத்தினால் திட்டம் முழுமையாக வெற்றி அடையும். 
பனை, தென்னை கருப்பட்டிக்கு மானியம் கொடுத்து ரேஷன் கடைகளில் அவற்றை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். கலப்படம் செய்வோருக்கு கருணை காட்டாமல் கடும் தண்டனை விதிக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இருந்து சென்னை வரை பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.
எங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கையை ஏற்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் ஜனவரி 21 ஆம் தேதி சென்னையில் அசுவமேத யாகம் நடத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.