ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் ஈரோடு மாவட்ட  மூத்தோர் கிரிக்கெட்  அணிக்கான வீரர்கள் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது . 
Updated on
1 min read

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் ஈரோடு மாவட்ட  மூத்தோர் கிரிக்கெட்  அணிக்கான வீரர்கள் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது . 
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கிடையேயான மூத்தோர்களுக்கான 20 ஓவர் எஸ்.எஸ்.ராஜன் கோப்பை லீக் சுற்று கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை திருப்பூரில் நடைபெறவுள்ளது. 
இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்களுக்கான தேர்வு வரும் பிப்ரவரி25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணியளவில் மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் வருமாறு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜாபர்ஆசிக்அலி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com