கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெருந்துறையில் பத்திர எழுத்தர்கள் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்

ஆன்லைன் பத்திரப் பதிவில் நிலவும் குளறுபடிகளைச் சரி செய்ய வலியுறுத்தி, பெருந்துறையில் பத்திர எழுத்தர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:59 am

DIN

ஆன்லைன் பத்திரப் பதிவில் நிலவும் குளறுபடிகளைச் சரி செய்ய வலியுறுத்தி, பெருந்துறையில் பத்திர எழுத்தர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
தமிழக அரசு ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதில் தொழில்நுட்பக் கோளாறுகள் அதிகம் உள்ளதால் பத்திரப் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய பத்திரப் பதிவு வேலை, ஆன்லைன் மூலம் செய்வதால் 3 முதல் 4 மணி நேரமாவதாக கூறப்படுகிறது.
ஆகவே,   இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள பத்திர எழுத்தர்கள்,  நில முகவர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.