ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலமாக நடைபெறவுள்ள தேர்வுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்ட செய்தி:
ரயில்வேயில் காலியாக உள்ள 89 ஆயிரத்து 409 காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக நேரடி எழுத்துத் தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், தேர்வுக்குத் தேவையான பாடக் குறிப்புகள் வினா, விடைகளும் நகலெடுத்து அளிக்கப்படவுள்ளது.
இதில், கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்ப நகல், கல்விச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகிவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வப் பயிலும் வட்டத்தை உடனே அணுகலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

