6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேக பூஜை

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மாத சிவராத்திரி வழிபாட்டுக் குழு சார்பில், ருத்ராபிஷேக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2018, 7:36 pm

DIN

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மாத சிவராத்திரி வழிபாட்டுக் குழு சார்பில், ருத்ராபிஷேக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பூஜையில் 11 ருத்ரர்களைக் கலசமாக வைத்து அலங்கரித்து மந்திரங்கள் ஓதி பூஜைகள் தொடங்கின. இந்த பூஜையில் கொடுமுடி ஆதீனம், சிவாச்சாரியர் பிரபு கலந்துகொண்டு 11 ருத்ரர்களுக்கு முன்பு யாகம் அமைத்து 108 ஹோம திவ்யங்களான இடம்பொறிக்காய், வலம்பொறிக்காய், நெல் பொறி, அவில், வெற்றிவேல் விலாங்குச்சி, ஏலக்காய், ஜாதிக்காய், திராட்சை, முந்திரி, ஒன்பது நவதானியங்கள், ஆப்பிள், மாதுளை முத்துக்கள், இளநீர், தேங்காய், நெய், மா, பழா, மர வேர்கள், மர பட்டைகள் என 108 திவ்யங்களை பிரபு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாக குண்டத்தில் போட்டு, மந்திரங்கள் ஓத அபிஷேக யாக பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். ருத்ர பூஜை குறித்து சிவாச்சாரியார் பிரபு கூறுகையில், உலக மக்களின் நன்மை கருதியும், மழை பெய்யவும்,விவசாயம் செழிக்கவும் வேண்டி இப்பூஜை நடைபெற்றதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.