தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரசுப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள்

அரசுப் பள்ளிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Updated On :14 மே 2018, 7:35 pm

அரசுப் பள்ளிக்கு அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு அருகே வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995-ஆம் ஆண்டு பிளஸ் 2 (வணிகவியல் பிரிவு) பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர் 40 பேர், அவர்களின் குடும்பத்தினருடன் பள்ளியின் விளையாட்டுப் பயிற்சிக்கு உதவும் வகையில் விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் தங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்கள், மாற்றங்கள் குறித்த நிகழ்வுகளைப் பறிமாறிக் கொண்டனர். முன்னாள் தலைமையாசிரியர் ஜானகிராமன், ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.
முன்னதாக, தங்களுடன் பயின்ற மாணவ, மாணவி, 2 ஆசிரியர்கள் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளி விளையாட்டு ஆசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.