மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸார் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஈரோட்டில் அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்.

Updated On :21 மே 2018, 7:27 pm

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஈரோட்டில் அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில், ராஜீவ் காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், துணைத் தலைவர் சாதிக்பாஷா, பொதுச் செயலர் மணி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் லோகேஸ்வரன், பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று தீவிரவாத கொடுஞ்செயலுக்கு எதிராக உறுதி ஏற்றுக் கொண்டனர்.
இதேபோல, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஈரோடு காமராஜர் உருவச் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், மண்டலத் தலைவர்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், அரவிந்த்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், சச்சிதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.