முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஈரோட்டில் அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில், ராஜீவ் காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், துணைத் தலைவர் சாதிக்பாஷா, பொதுச் செயலர் மணி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் லோகேஸ்வரன், பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று தீவிரவாத கொடுஞ்செயலுக்கு எதிராக உறுதி ஏற்றுக் கொண்டனர்.
இதேபோல, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஈரோடு காமராஜர் உருவச் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், மண்டலத் தலைவர்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், அரவிந்த்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், சச்சிதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையாது!

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்

கரூரில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

