கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூவரை சனிக்கிழமை இரவு கைது செய்த போலீஸார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 11 டன் அரிசியையும், 5 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார் ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான கச்சேரி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீஸார், அங்கிருந்த மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், பவானி- தேவபுரத்தைச் சேர்ந்த டைனிதாமஸ் (40), தினேஷ்குமார் (30), சேலம் மாவட்டம்- குமாரமங்கலம், வினோபாஜிநகரை சேர்ந்த பிரசாந்த் (28) ஆகியோர் என்பதும், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கர்நாடக மாநிலத்துக்குக் கடத்த முயன்றதும் தெரியவந்தது.
3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 11 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 மினி லாரிகள், 2 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் தலைமறைவாக உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: மாவட்ட தோ்தல் அதிகாரி!

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமி தேரோட்டம்

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்

சித்ரா பெளா்ணமி: வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

