
சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ செல்லி அம்மன் கோயில் பொங்கல் விழா 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது.
பொங்கல் விழா ஆகஸ்ட் 22 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29 ஆம் தேதி சுவாமிக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பொங்கல் விழா தொடங்கியது. காலை 7 மணி முதல் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மதியம் 12 மணிக்கு குதிரை துளுக்கு கேட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் மஹா பூஜை தீபாரதனை நடைபெற்றது. வியாழக்கிழமை பிற்பகலில் மறுபூஜையுடன் விழா
நிறைவுபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






