இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஈரோட்டில் இன்று மின் நுகர்வோர்  குறைகேட்பு முகாம்

ஈரோடு மின்பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறை கேட்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:46 am IST

ஈரோடு மின்பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறை கேட்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் த. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மின் நுகர்வோர்களின் குறைகளைக் களையும் நோக்கில்  மாதம்தோறும் இரண்டாவது வாரம் புதன்கிழமை குறை கேட்பு முகாம் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறை கேட்பு முகாம்  ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட  செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 13) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.  
எனவே, இம்முகாமில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு  மின்வினியோகம் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.