அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

ஈரோட்டில் இன்று மின் நுகர்வோர்  குறைகேட்பு முகாம்

ஈரோடு மின்பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறை கேட்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.

Updated On :13 பிப்ரவரி 2019, 7:46 am IST

ஈரோடு மின்பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறை கேட்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் த. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மின் நுகர்வோர்களின் குறைகளைக் களையும் நோக்கில்  மாதம்தோறும் இரண்டாவது வாரம் புதன்கிழமை குறை கேட்பு முகாம் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறை கேட்பு முகாம்  ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள தெற்கு கோட்ட  செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 13) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.  
எனவே, இம்முகாமில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு  மின்வினியோகம் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்துப் பயன்பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.