ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

விஜயமங்கலம் சசூரி கல்லூரியில் கலை விழா

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், நடுப்பட்டி, சசூரி கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு

Updated On :25 பிப்ரவரி 2019, 10:13 am IST

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், நடுப்பட்டி, சசூரி கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையே "சிரிஷ்டா-19' என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
விழாவுக்கு கல்லூரித் தாளாளர் அ.மு.கந்தசாமி தலைமை வகித்தார். முதல்வர் சு.விமல்ஆனந்த் வரவேற்றார்.
முதல் நாள், பள்ளிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
 இரண்டாவது நாள், கல்லூரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
விழாவில், சிறப்பு அழைப்பாளராக, திரைப்பட நடிகர்கள் சதீஷ், ரியோராஜ், திரைப்பட நடிகை ஜனனி ஐயர் ஆகியோர் கலந்துகொண்டு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர். விழாவில், கல்லூரி மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சேகரித்த விவசாயம் சார்ந்த பொருள்களான மண்வெட்டி, மோட்டார் பம்புகள், விதைகள், உரங்கள் மற்றும் மரக்கன்றுகள் நலிவடைந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.