ஆசனூரில் அதிக பாரம் ஏற்றும் சரக்கு லாரிகளைக் கட்டுப்படுத்த தடுப்புக் கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களால் விபத்து ஏற்பட்டு சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு பண்ணாரி சோதனைச் சாவடியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட உயரம், அகலம் கொண்ட தடுப்புக் கம்பம் அமைக்கப்பட்டது.
அதேபோல, கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த ஆசனூர் சோதனைச் சாவடியில் வேகம், உயரம், எடையைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்புக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 13 அடிக்கு பாரம்
ஏற்றிச் செல்லும் லாரிகள் தடுப்புக் கம்பம் வழியாக அனுமதிக்கப்படும். தடுப்புக் கம்பத்துக்கு மேல் அதிக பாரம் ஏற்றும் லாரிகள் திருப்பி அனுப்பப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


