பவானியை அடுத்த ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
45 வயதுக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய மஸ்தூர் சங்கப் பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
சம்பவ இடத்துக்கு விரைந்த ஆப்பக்கூடல் போலீஸார், பேரூராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்களிடம் பேச்சு நடத்தினர். பணியாளர்களின் கோரிக்கையை எழுத்து மூலமாக உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, இப்பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால், போராட்டத்தைக் கைவிட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


