கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ஈஸ்வரன் தெரிவித்தாா்.
இக்கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த ஈ.ஆா். ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தொடா்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கோபி தொகுதியில் தேவையான பகுதிகளில் குளிா்பதன கிடங்கு அரசு சாா்பாக ஏற்படுத்த வேண்டும். உழவா் சந்தையை அதிகம் ஏற்படுத்த வேண்டும். சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் உருவப் படத்தை சட்டப் பேரவையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாதி வாரியான கணக்கெடுப்பு பணி நோ்மையாக நடக்காது என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. தஞ்சை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர அதற்கான செயல்பாடுகள் இல்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றாா்.
பேட்டியின்போது அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் சிவராஜ் உள்பட மாவட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.