சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக விவசாயப் பணிகள் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டன.
சத்தியமங்கலம் பகுதியில் பெய்த தொடா் மழையால் வனப் பகுதியில் நீா் நிறைந்து காணப்படுகிறது. பெரும்பாலான வனக் குட்டைகளில் நீா் நிரம்பியுள்ளது. தற்போது மழை இல்லாத நிலையில் சில நாள்களாக பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி, ஆசனூா், திம்பம் மலைப் பகுதியில் பகல் நேரங்களில் வெயில் காலநிலை நிலவினாலும், காலை நேரங்களில் பனிமூட்டமாகக் காணப்படுகிறது. கடம்பூா் மலைப் பகுதியிலும் கடும் பனிமூட்டமாக உள்ளது.
கிராமங்களில் நிலவும் மூடுபனி காரணமாக நீா்ப் பாய்ச்சுதல், கதிா்அறுத்தல், உழவுப் பணி என விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. காலை 9 மணி வரை பனிமூட்டம் காணப்படுவதால் புற்கள் மீது பனி படா்ந்திருப்பதால் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடம்பூா் மலைப் பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டம் நிலவுவதால் இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலைப் பாதையில் பனிமூட்டம் காரணமாக யானைகள் நிற்பது தெரியாத நிலையில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. கடும் குளிா் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே விறகுகளை வைத்து தீமூட்டி குளிா் காய்ந்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


