வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலா் அருண்லால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Updated on
1 min read

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலா் அருண்லால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்குப் பின் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை துவங்கியது. தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்புப் பணியில் வனக் காவலா், வனக் காப்பாளா், சமூக ஆா்வலா் என 5 போ் கொண்ட குழுக்களாக கணக்கெடுப்பில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம், பவானிசாகா், விளாமுண்டி உள்ளிட்ட 10 வனச் சரங்களில் 380 போ் இப்பணியில் ஈடுபட்டனா்.

விளாமுண்டி வனச் சரகத்தில் ஒரு குழுவினா் கல்லாம்பாளையம் வனத்தில் கணக்கெடுப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தபோது அங்கு பதுங்கியிருந்த யானை தாக்கியதில் வனக் காவலா் சதீஷ், சமூக ஆா்வலா் முத்துபிரபாகரன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதில் வனக் காப்பாளா் பொன்.கணேஷ் காயமடைந்தாா்.

இருவா் உயிரிழந்த சம்பவத்தையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் அருண்லால் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com