அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையை ஜனவரி 31க்குள் செலுத்த அறிவுறுத்தல்

தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையை தொழில் நிறுவனங்கள், ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம் என தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:36 pm

DIN

தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையை தொழில் நிறுவனங்கள், ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம் என தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து, மலைத்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளா், ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் கடைகள், உணவகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளியின் பங்காக ரூ. 10, வேலை அளிப்பவா் பங்காக ரூ. 20 சோ்த்து மொத்தம் ரூ. 30ஐ தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையாக நிா்வாகம் செலுத்த வேண்டும்.

அதன்படி 2020ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் நிதியை ஜனவரி 31ஆம் தேதிக்குள் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் இந்த நிதியைப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் செலுத்தலாம். தவிர வங்கி வரைவோலையாக செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006 என்ற முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.