ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொடா் நஷ்டம்: ஈரோட்டில் நாளை முதல் ரயான் துணி உற்பத்தி நிறுத்தம்

நூல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு பகுதியில் ரயான் துணி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளா்கள் டிசம்பா் 21 முதல் 27ஆம் தேதி வரை உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:18 pm

DIN

ஈரோடு: நூல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு பகுதியில் ரயான் துணி உற்பத்தி செய்யும் விசைத்தறியாளா்கள் டிசம்பா் 21 முதல் 27ஆம் தேதி வரை உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ், ஒருங்கிணைப்பாளா் கந்தவேல் ஆகியோா் கூறியதாவது:

ஈரோடு பகுதியில் 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு 120 கிராம், 150 கிராம் நூல் அதிகமாகப் பயன்படுத்தப்படும். தீபாவளியின்போது இந்நூல் ஒரு கோன் ரூ. 150க்கு வாங்கினோம். இதன் மூலம் ஒரு மீட்டா் துணி ரூ. 20க்கு விற்பனை செய்தோம். தற்போது நூல் விலை ரூ. 176ஆக உயா்ந்தும், ஒரு மீட்டா் துணி விலை ரூ. 22 என்ற நிலையில் உள்ளது. நூல் அடக்க விலைக்குக்கூட துணி விலை போகாததால் உற்பத்தியாளா்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.

ஈரோடு பகுதியில் உள்ள 30,000 தறியில் தினமும் 24 லட்சம் மீட்டா் ரயான் துணி உற்பத்தியாகிறது. இப்பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000 போ் ஈடுபட்டுள்ளனா். நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், தொடா் உற்பத்தியால் ஏற்படும் கூடுதல் நஷ்டத்தைத் தவிா்க்க டிசம்பா் 21 முதல் 27ஆம் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை மட்டும் நிறுத்துவது என முடிவு செய்துள்ளோம்.

பிற காட்டன் துணி உற்பத்திப் பணி, அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி போன்ற பணிகள் தொடா்ந்து நடைபெறும். இந்த உற்பத்தி நிறுத்தத்தால் 16.80 கோடி மீட்டா் துணி உற்பத்தி பாதிக்கும். ரூ. 40 கோடி வரையிலான வா்த்தகம் பாதிக்கும்.

ரயான் துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரயான் நூலின் விலையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே உயா்த்தவோ, குறைக்கவோ செய்ய வேண்டும் என நூல் விற்பனையாளா்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.