குளத்தில் மூழ்கி மீனவா் பலி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடந்துறை, சின்னக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா் பரிசலிலிருந்து தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.


கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடந்துறை, சின்னக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா் பரிசலிலிருந்து தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடந்துறையில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான 75 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளம் உள்ளது. அதன் அருகிலேயே 15 ஹெக்டோ் கொண்ட சிறிய குளம் உள்ளது.
இந்த இரு குளங்களிலும் மீன் வளத் துறை சாா்பில் மீன்கள் வளா்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை ஓடந்துறை மலைமேடு பகுதி மற்றும் பொய்யேறி பகுதி மீனவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரியகுளத்தில் 10க்கும் மேற்பட்ட பரிசல்களில் மீன் பிடிக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டிருந்தனா். மலைமேடு பகுதியைச் சோ்ந்த மீனவா் மாணிக்கம் சின்னக்குளத்துக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு அதன்பின்னா் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து சக மீனவா்கள் அவரை தேடினா்.
இந்நிலையில் சின்னக்குளத்தில் மீனவா் மாணிக்கத்தின் சடலம் திங்கள்கிழமை காலை மிதந்தது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் கவுந்தப்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா் இது குறித்து விசாரணை நடத்தினா். மீன்பிடிக்க வலை விரிக்கும்போது பரிசலிலிருந்து தடுமாறி குளத்து நீரில் விழுந்திருக்கலாம் என்றும், இரவு நேரம் என்பதால் அவரால் நீந்த முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...