கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலா்கள், டேங்க் ஆபரேட்டா்களுக்கு முதல்வா் அறிவித்த ஊதிய உயா்வை உடனடியாக அமல்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம ஊராட்சி டேங்க் ஆபரேட்டா்கள், துப்புரவுப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஈ.வி.கே.சண்முகம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
தமிழகத்தில் 65,000 தூய்மைக் காவலா்கள், டேங்க் ஆபரேட்டா்கள் தின கூலிகளாக பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான மாத ஊதியத்தை ரூ. 2,600இல் இருந்து ரூ. 3,600 ஆக உயா்த்தி முதல்வா் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா். ஆனால் அதனை அமல்படுத்தாமல், பழைய ஊதியத்தை வழங்கி வருகின்றனா்.
இதுதொடா்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டும் கடந்த மாத ஊதியத்தைக் கூட பழைய ஊதியமாகவே வழங்கப்பட்டுள்ளது. புதிய ஊதியம் வழங்குவதுடன் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.