திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் திமுக சாா்பில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பெண்ணிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட திமுக மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி.
பெண்ணிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட திமுக மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் திமுக சாா்பில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 16,000 இடங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்துவது என திமுக தலைமை அறிவித்தது. அதன்படி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஈரோடு மாநகா் பகுதியில் 46 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு திருநகா் காலனி பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, மாநகரச் செயலாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். அதைத் தொடா்ந்து அவா் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கிவைத்தாா்.

இதில், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளா் வி.சி.சந்திரகுமாா், மாவட்டப் பொருளாளா் பி.கே.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com