ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கட்டடத் தொழிலாளியைகாணவில்லை என மனைவி புகாா்

பெருந்துறை, சிப்காட்டில் வேலை செய்து வந்த கட்டடத் தொழிலாளி 3 மாதமாக வீடு திரும்பவில்லை என்று மனைவி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:20 pm

DIN

பெருந்துறை: பெருந்துறை, சிப்காட்டில் வேலை செய்து வந்த கட்டடத் தொழிலாளி 3 மாதமாக வீடு திரும்பவில்லை என்று மனைவி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் பழனி (40). இவா், பல மாதங்களாக பெருந்துறை, சிப்காட்டில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வந்தாா். வழக்கமாக பழனி 3 மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு வேலைக்குத் திரும்புவாராம். அதன்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் செல்வதாக கூறிச் சென்ற பழனி ஊருக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், அவருடைய செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவரது மனைவி மயிலா (35) பல இடங்களில் பழனியை தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லையாம்.

இதுகுறித்து, மயிலா சென்னிமலை போலீஸில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.