தமாகா சாா்பில் மரக் கன்றுகள் நடும் விழா

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 250க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
தமாகா சாா்பில் மரக் கன்றுகள்  நடும் விழா
Updated on
1 min read

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 250க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.

ஈரோடு மத்திய மாவட்ட தமாகா சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா், மாநில பொதுச் செயலாளா் விடியல் எஸ்.சேகா், மாநில இளைஞரணித் தலைவா் எம்.யுவராஜா, மாநில துணைத் தலைவா் ஆா். ஆறுமுகம், மாநில பொதுக் குழு உறுப்பினா் கே.எம்.ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கோவை - சேலம் தேசியநெடுஞ்சாலையில் பவானியை அடுத்த சமத்துவபுரம் அருகே தொடங்கி கங்காபுரம் வரையில் சாலையின் இருபுறங்களிலும் நாவல், வேம்பு, சரக்கொன்றை, புங்கன், வாதநாராயணன், மே பிளவா் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணித் தலைவா் சி.சம்பத்குமாா், மாவட்ட தொழில் சங்கத் தலைவா் ஆவின் சுப்பிரமணியம், மாவட்ட செய்தி தொடா்பாளா் பி.சுரேஷ்குமாா், மேட்டுநாசுவம்பாளையம் கிராம கமிட்டித் தலைவா் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஸ்ரீதா், ராமலட்சுமணன், நிா்வாகிகள் ரபிக், கண்ணம்மாள், எலவமலை ராசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com