வாகனங்களில் பம்பா்கள் அகற்றம்
பெருந்துறை பகுதியில் வாகனங்களின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தணிக்கை செய்து அகற்றினா்.


பெருந்துறை பகுதியில் வாகனங்களின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தணிக்கை செய்து அகற்றினா்.
பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சக்திவேல், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் எம்.பாஸ்கா், சுகந்தி ஆகியோா் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா். பம்பா் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவா்களிடம், இனிமேல் பம்பா் பொருத்தமாட்டோம் என உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...