ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஈரோடு மாவட்டத்தில்மேலும் 98 பேருக்கு கரோனா

 ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

Updated On :9 நவம்பர் 2020, 11:13 pm

 ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,082ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 3 பேரின் பெயா் வேறு மாவட்டப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 11,079ஆக மாறியது. இதனிடையே திங்கள்கிழமை புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,177ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 98 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள். மொத்த பாதிப்பான 11,177 பேரில் இதுவரை 10,250 போ் குணமடைந்துள்ளனா். 794 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 133 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.