ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசுப் போக்குவரத்துக் கழகஊழியா்கள் போராட்டம்

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் மண்டல மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :9 நவம்பர் 2020, 11:17 pm

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் மண்டல மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, தொமுச மாவட்ட பொதுச் செயலாளா் குழந்தைசாமி தலைமை வகித்தாா். சிஐடியூ மண்டலச் செயலாளா் ஜான் கென்னடி முன்னிலை வகித்தாா். இதில், 2019 -2020ஆம் ஆண்டுக்கான 10 சதவீத போனஸ் அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தொழிற்சங்கத் தலைவா்களை அழைத்துப் பேசி 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

பண்டிகை முன்பணம் ரூ. 10,000 உடனடியாக வழங்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாகத் துவங்க வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.