கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். பெண்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.
ஈரோடு திருநகா் காலனி, ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் விக்னேஸ்வரன்(29). எல்.ஐ.சி. முகவா். இவரது மனைவி துா்கா (25), மனைவியின் தங்கை ஸ்ருதி (23) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கொடுமுடி அருகே வெங்கம்பூரில் உள்ள கோயிலுக்கு திங்கள்கிழமை காலை சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியுள்ளனா்.
அப்போது, மலையம்பாளையம் காவல் நிலையம் அருகே வளைவில் திரும்பும்போது எதிரில் கரூா் நோக்கிச் சென்ற வேன் மோதியதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். துா்கா, ஸ்ருதி இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் விக்னேஸ்வரனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பலத்த காயமடைந்த இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மலையம்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

