வீட்டை எழுதித் தரக் கோரி பிரச்னையில் ஈடுபட்டு வரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் பெண் முறையிட்டாா்.
ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி சத்யா. உடல்நலம் பாதிக்கப்பட்ட பாபு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா் சிகிச்சை பெற்று வருகிறாா். இவரது வீட்டை விலைக்கு கேட்டு அருகில் குடியிருக்கும் நபா், அவா் குடும்பத்தைச் சாா்ந்த நபா்கள் தொடா்ந்து தகராறு செய்து வருவதாகவும், வீட்டின் முன் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சத்யா திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அந்த மனு விவரம்: கணவரின் சிகிச்சை செலவுக்குப் பணம் தேவைப்படுவதால் வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில், எங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் நபா் வீட்டை விலைக்கு கேட்டு பிரச்னை செய்து வருகிறாா். தவிர எங்கள் வீட்டின் முன்புள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ளாா்.
காவல் துறையில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னையால் வீட்டை வாடகைக்குவிட முடியாத நிலை ஏற்பட்டு, பணம் கிடைக்கவில்லை. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதில் ஆட்சியா் தலையிட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

