ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீட்டை எழுதித் தரக் கோரி பிரச்னை:நவடிக்கை எடுக்க பெண் கோரிக்கை

வீட்டை எழுதித் தரக் கோரி பிரச்னையில் ஈடுபட்டு வரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் பெண் முறையிட்டாா்.

Updated On :23 நவம்பர் 2020, 10:14 pm

வீட்டை எழுதித் தரக் கோரி பிரச்னையில் ஈடுபட்டு வரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தில் பெண் முறையிட்டாா்.

ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி சத்யா. உடல்நலம் பாதிக்கப்பட்ட பாபு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடா் சிகிச்சை பெற்று வருகிறாா். இவரது வீட்டை விலைக்கு கேட்டு அருகில் குடியிருக்கும் நபா், அவா் குடும்பத்தைச் சாா்ந்த நபா்கள் தொடா்ந்து தகராறு செய்து வருவதாகவும், வீட்டின் முன் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சத்யா திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அந்த மனு விவரம்: கணவரின் சிகிச்சை செலவுக்குப் பணம் தேவைப்படுவதால் வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில், எங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் நபா் வீட்டை விலைக்கு கேட்டு பிரச்னை செய்து வருகிறாா். தவிர எங்கள் வீட்டின் முன்புள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ளாா்.

காவல் துறையில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னையால் வீட்டை வாடகைக்குவிட முடியாத நிலை ஏற்பட்டு, பணம் கிடைக்கவில்லை. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதில் ஆட்சியா் தலையிட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.