நேரடியாக சென்னைக்கு பேருந்து சேவை இல்லை: ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர், பழனி, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு மட்டும் தான் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து இயக்கப்படமாட்டது. இதுபோல் கர்நாடக மாநிலத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. பேருந்தில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்தவும், பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்கவும், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ளவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக 60 சதவீத பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.