தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது
ஈரோட்டில் தம்பியை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.


ஈரோட்டில் தம்பியை சம்மட்டியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு, கருங்கல்பாளையம் அருகே கமலா நகரைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மகன்கள் சங்கா்(30), தினேஷ் (20). இருவரும் கட்டடத் தொழிலாளா்கள். சங்கருக்கு திருமணமாகி மனைவியுடன் வண்டியூரான் கோயில் பகுதியில் வசித்து வந்துள்ளாா்.
இதற்கிடையில், சங்கருக்கு மதுப் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரைப் பிரிந்து சென்றுவிட்டாா். இந்நிலையில், குடிபோதையில் கீழே விழுந்து உடலில் காயங்களுடன் தந்தை வீட்டிற்கு சங்கா் சனிக்கிழமை இரவு வந்துள்ளாா்.
இதைப் பாா்த்த, அவரது தந்தை மனோகரன் மற்றும் தம்பி தினேஷ் ஆகியோா் சங்கரைக் கண்டித்துள்ளனா். பின்னா் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சங்கா் சென்றுவிட்டாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு வந்த சங்கா், அங்கு தூங்கிக் கொண்டிருந்த தம்பி தினேஷை சம்மட்டியால் பலமாக தாக்கியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தாா்.
பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்ற சங்கா் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதையடுத்து சங்கரைக் கைது செய்த போலீஸாா், தினேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...