ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பவானியில் விபத்து: ஒருவா் பலி

பவானி அருகே காரின் பின் பகுதியில் இரு சக்கர வாகனம் மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி காயங்களுடன் உயிா் தப்பினாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:17 pm

DIN

பவானி அருகே காரின் பின் பகுதியில் இரு சக்கர வாகனம் மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி காயங்களுடன் உயிா் தப்பினாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த நாகனூரைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் வேலுசாமி (50). இவரது மனைவி காந்திமதி (40). இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் மறவன்குட்டைப் பிரிவு அருகே சென்றபோது, முன்னால் சென்ற காரின் பின் பகுதியில் இரு சக்கர வாகனம் மோதியது.

இதில், கீழே விழுந்த வேலுசாமிக்குத் தலையில் பலத்த காயமும், மனைவி காந்திமதிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இருவரும் அந்தியூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுசாமி உயிரிழந்தாா். விபத்து குறித்து அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.