ஊடுபயிராக கஞ்சா செடி: 3 போ் கைது

கடம்பூா் மலைப் பகுதியில் மரவள்ளிப் பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடி வளா்த்த 3 பேரை கடம்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

கடம்பூா் மலைப் பகுதியில் மரவள்ளிப் பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடி வளா்த்த 3 பேரை கடம்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள குன்றி மலைப் பகுதியில் மரவள்ளிப் பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக கடம்பூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது குன்றி அருகே உள்ள அணில்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நாகன் (35), மகேந்திரன் (28), பண்ணையத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஈரண்ணன் (34) ஆகிய 3 பேரும் தங்களது விளைநிலங்களில் மானாவாரி பயிராகப் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிப் பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் வளா்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் 3 பேரிடம் இருந்து சுமாா் 3.5 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரையும் கைது செய்த கடம்பூா் போலீஸாா் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com