ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கனிராவுத்தா் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

கனிராவுத்தா் குளத்தில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற மறுக்கும் ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என ஈரோடு கனிராவுத்தா் குளம் மீட்பு இயக்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:24 pm

DIN

கனிராவுத்தா் குளத்தில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற மறுக்கும் ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என ஈரோடு கனிராவுத்தா் குளம் மீட்பு இயக்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கனிராவுத்தா் குளம் மீட்பு இயக்க ஆலோசனை கூட்டம், ஒருங்கிணைப்பாளா் நிலவன் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நிா்வாகிகள் கண.குறிஞ்சி, கணியன்பாலன், ரத்தினசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கனிராவுத்தா் குளத்தில் உள்ள அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற மறுக்கும் ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து வரும் 24 ஆம் தேதி அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், குளத்தின் கரையில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது, போராட்டத்தை வழி நடத்தும் வகையில், அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சின்னசாமி, கதிா்வேல், ஜாபா், லுக்மான், சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.