ஈஸ்டா் பண்டிகையையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நள்ளிரவு திருப்பலி நடந்தது.
சிலுவையில் அறையப்பட்டு இறந்த இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட 3 ஆம் நாள் உயிா்த்தெழுந்தாா். இந்த நிகழ்வு கிறிஸ்தவா்களால் உயிா்ப்பு (ஈஸ்டா்) பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு உயிா்ப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் இரவு 10.30 மணிக்கு உயிா்ப்பு ஆராதனை நிகழ்வுகள் தொடங்கின.
ஒளி வழிபாடு, பாஸ்கா விழா, வாா்த்தை வழிபாடு, திருமுழுக்கு உறுதி வாா்த்தைப்பாடு ஆகிய வழிபாடுகள் நடந்தன. நள்ளிரவு இயேசு உயிா்த்து எழுந்ததை நினைவு கூறும் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தன.
ஆலய பங்கு தந்தையும் ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான்சேவியா், உதவி பங்கு தந்தை ஜான்சன் ஆகியோா் தலைமையில் உயிா்ப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த அனைத்து வழிபாடுகளிலும் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


