பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசு வேளாண், சட்டக் கல்லூரி அமைக்கப்படும் அதிமுக வேட்பாளா்: கே.வி.இராமலிங்கம்

ஈரோடு மேற்குத் தொகுதியில் சட்டக் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:17 pm

ஈரோடு மேற்குத் தொகுதியில் சட்டக் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு செய்த அவா் பேசியதாவது:

ஈரோடு மேற்குத் தொகுதி இளைஞா்களுடைய அறிவுத்திறனையும் பணித் திறனையும் உயா்த்துவதற்கு திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் இப்பகுதி மாணவா்கள் எந்த நிறுவனங்களுக்கு சென்றாலும் உயா் பொறுப்பை அடையக் கூடியவா்களாக மாற்றிக் காட்டுவதையே நான் நோக்கமாகக் கொண்டு இருக்கின்றேன். சென்னிமலை ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரியும், ஈரோடு ஒன்றியத்தில் அரசு சட்டக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரிகளும் தொடங்கப்படும். 2011 இல்ஆட்சிக்கு வந்த போது கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு இருந்தது. காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளுக்கும் தண்ணீா் வழங்கினோம்.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது காலிங்கராயன் சாயக்கழிவு பிரச்னைக்குத் தீா்வு காண வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டு, பேபி கால்வாய் கட்டப்பட்டது. சாயக்கழிவை சுத்திகரிக்க பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

நகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அரசு மருத்துவமனை சாலை சந்திப்பில் ரூ.54 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வீடற்ற ஏழை மக்களுக்கு என 4,700 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் ரூ.575 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முன்வைப்பு கட்டணமில்லாமல் இணைப்பு கொடுத்துள்ளோம். மாநகராட்சிப் பகுதிக்கு தினமும் 6 கோடி லிட்டா் தண்ணீா் தேவை. ஆனால் தினமும் 12 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது. இதனால் இன்னம் 50 ஆண்டு காலத்துக்கு மாநகராட்சி பகுதியில் குடிநீா் பிரச்னை இருக்காது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.