வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெருமாநல்லூர் அருகே சாலை விபத்து: 2 இளைஞர்கள் பலி

பெருமாநல்லூர் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

News image
விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்.
Updated On :10 ஏப்ரல் 2021, 3:32 pm

DIN

பெருமாநல்லூர் அருகே சாலை விபத்தில் இரு இளைஞர்கள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அவுல்பூந்துறை பூவண்டிவலசு பகுதியைச் வடிவேல் மகன் பிரவீன் சங்கர்(25). இவரது நண்பர் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த மனோரஞ்சன்(24). 

தனியார் கேட்டிரிங் கல்லூரி மாணவர்களான இவர்கள் இருவரும் கோவையில் இருந்து ஈரோடு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலக சாலை அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. 

இதில் பலத்த காயமடைந்த பிரவீன்சங்கர், மனோரரஞ்சன் ஆகியோர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.