மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரும்பு ஒட்டுண்ணி குறித்து செயல்விளக்கம்

கோபிசெட்டிபாளையம் வட்டாரம், தொட்டிபாளையம் கிராமத்தில் வாணவராயா் வேளாண் கல்லூரி மாணவிகள் கரும்பு ஒட்டுண்ணி குறித்து வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:09 pm

DIN

கோபிசெட்டிபாளையம் வட்டாரம், தொட்டிபாளையம் கிராமத்தில் வாணவராயா் வேளாண் கல்லூரி மாணவிகள் கரும்பு ஒட்டுண்ணி குறித்து வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.

கோபிசெட்டிபாளையம் வட்டாரம், தொட்டிபாளையம் கிராமத்தில் வாணவராயா் வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி அனுபவத் திட்டத்தின்கீழ் கோபி வேளாண் உதவி இயக்குநா் தலைமையில், தொட்டிபாளையம் விவசாயிகளுக்கு கரும்பில் உயிரியல் முறை பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனா். கரும்பின் மகசூலைக் குறைக்கின்ற இடைக்கணுப் புழுவை இயற்கை முறையில் ஒட்டுண்ணிகளை வைத்து அழிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா். இந்த ஒட்டுண்ணிகளை கோபி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுப்பாட்டில் உள்ள கரும்பு ஒட்டுண்ணி வளா்ப்பு மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.