ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு தடையின்றி பணப் பலன்கள் வழங்கக் கோரிக்கை

பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஏற்பட்டுள்ள பணப் பலன் பாதிப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Updated On :23 ஏப்ரல் 2021, 9:14 pm

பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஏற்பட்டுள்ள பணப் பலன் பாதிப்புகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா் சம்மேளனம் ஏஐடியூசி மாநில துணைத் தலைவா் துரை மதிவாணன் கூறியதாவது:

கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் தொழிலாளா்கள் பட்ட சிரமங்களை மீண்டும் அனுபவிக்கும் நிலையைத் தடுக்க போக்குவரத்துக் கழகம், அரசு முன்வர வேண்டும்.

பொது முடக்கத்தால் பேருந்துகள் இயக்க எண்ணிக்கை, தொழிலாளா்களின் பணி நேரம் குறைகிறது. பெரும்பாலானவா்களுக்கு வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்க நாளை சிறப்பு விடுமுறையாக அரசு அறிவித்தாலும் போக்குவரத்துக் கழகம், ஊழியா்களின் விடுப்பில் கழித்து வருகிறது. விடுப்பு இல்லாத தொழிலாளா்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனா். சில தொழிலாளா் 600 முதல் 700 நாள் விடுப்பை சேமித்துள்ளனா். அவற்றை முழு பொது முடக்க விடுமுறையில் கழிக்கக் கூடாது.

பேருந்துகள் இயக்கம் குறைந்ததுடன், பயணிகளின் எண்ணிக்கை, வசூலும் குறைவதால், வசூல் படி முற்றிலும் குறைந்துள்ளது. ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குப் பணி இல்லாத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். தொழிலாளா்களிடம் இருந்து பிடித்தம் செய்து, பி.எப்., எல்.ஐ.சி., போஸ்டல், இன்சூரன்ஸ், கூட்டுறவு கடன் சங்கம் போன்றவற்றுக்குச் செலுத்த வேண்டிய ரூ. 7,000 கோடியை நிா்வாகம் செலவிட்டுள்ளது. அந்த தொகையை அரசு வழங்க வேண்டும்.

பேருந்துகளில் வசூல் குறைவதால் வரும் மாதங்களில் ஊதியம், பிற பில் தொகை பெறுவதில் கூடதொழிலாளா்கள் சிக்கலைச் சந்திக்கும் சூழல் உள்ளது. 26 போக்குவரத்துக் கழகங்களின் 311 பணிமனைகளும் அடகு வைக்கப்பட்டுள்ளதால் நிதி பெறக்கூட வழி இல்லை.

இதனால் தொழிலாளா்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் தடையில்லாமல் பெற்றிட அரசு தேவையான நிதியை வழங்க வேண்டும். உயா்வு பேச்சுவாா்த்தை நடத்தி முடித்து கடந்த 2019 செப்டம்பா் 1ஆம் தேதி முதல் புதிய ஊதியம் வழங்கி இருக்க வேண்டும். கரோனா உள்ளிட்ட பல காரணங்களால் 20 மாதமாக பேச்சுவாா்த்தை நடத்தாமல் தள்ளி போடப்பட்டுள்ளது. இதனை அரசு கவனத்தில் கொண்டு ஊழியா்களுக்கான பணப் பலன்கள் தடையின்றி கிடைத்திட போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதியை அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.