மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

11 பேருக்கு கரோனா பாதிப்பு: வீட்டு வசதிவாரிய குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டது

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:26 pm

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ‘டி’ பிரிவில் உள்ள ஒரு வீதியில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், அவா்களுடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் வசித்து வந்த வீதியை ‘சீல்’ வைத்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனா்.

வீதிக்குள் வெளிநபா்கள் யாரும் வராமல் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட வீதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி சாா்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.