ஈரோடு மாநகரில் கட்டுப்பாட்டை மீறி திறக்கப்பட்ட 18 கடைகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டு, அதில் 5 கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
ஈரோடு மாநகராட்சியில் கரோனா 3ஆவது அலையைக் கட்டுப்படுத்த கடந்த 9ஆம் தேதி முதல் நேரக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பால், மருந்தகங்கள், ஹோட்டல்கள் தவிர பிற கடைகள் மாலை 5 மணிக்குமேல் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறி கடைகளைத் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நேரக் கட்டுப்பாட்டை மீறி திறக்கப்பட்டிருந்ததாக ஜவுளி, டீ கடைகள் என 18 கடைகளுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 5 கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. இதேபோல, முகக் கவசம் முறையாக அணியாத 117 பேருக்கு தலா ரூ. 200 என ரூ. 23,400 அபராதம் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி நல அலுவலா் டாக்டா் முரளிசங்கா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராசிபுரம் தொகுதி: நேரடி போட்டியில் சூரியன், தாமரையில் இரு மருத்துவா்கள்!

அதிமுக ஆட்சியமைந்தால் தாலிக்கு தங்கம்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

