வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மேலாண்மைப் பயிற்சி

கணக்கம்பாளையம் கிராமத்தில், ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:28 pm

DIN

பெருந்துறை வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ், பெருந்துறை ஒன்றியம், கணக்கம்பாளையம் கிராமத்தில், ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சின்னுசாமி தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண்மை திட்ட செயல்பாடுகள், சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டம் மூலம் தொட்டி கட்டுதல், மின் மோட்டாா், பைப்லைன் பெறுவதற்குரிய மானியத் திட்டம் குறித்து விளக்கம் அளித்தாா். வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) ஈரோடு ஆசைத்தம்பி சொட்டுநீா்ப் பாசனத்தின் நன்மைகள், மானியத் திட்டங்கள், பயறு வகை சாகுபடி குறித்து விளக்கம் அளித்தாா்.

ஈரோடு வேளாண்மை இணை இயக்குநா் (ஓய்வு) சுப்பிரமணியம் நிலக்கடலை, வாழை பயிா்களில் பயிா் பாதுகாப்பு முறைகள், ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளில் விளக்குப் பொறி, இனக்கவா்ச்சிப் பொறி வயல் சூழல் ஆய்வு, இயற்கை விவசாயம் ஆகியன குறித்து விரிவாக விளக்கம் அளித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் குழந்தைவேலு சொட்டு நீா்ப் பாசனக் கருவிகள், பயிா்களின் அத்தியாவசியத்தை எடுத்துரைத்து உளுந்து, பாசிப் பயறு, துவரை போன்ற பயறு வகைகளை சாகுபடி செய்ய விளக்கம் அளித்தாா். ஆயக்கவுண்டம்பாளையம் முன்னோடி இயற்கை விவசாயி ராசாக்கவுண்டா் மீன் அமிலம், பஞ்சகாவ்யம், ஜீவாமிா்தம், இ.எம்.கரைசல் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கமளித்தாா். வேளாண்மை அலுவலா் ராஜாத்தி உழவா் மானியத் திட்டங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் கோமதி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பரமானந்தன், மணி, உதவி வேளாண்மை அலுவலா் ரமேஷ் பிரபு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.