வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் முருகேஷ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
கரோனா பரவல் காரணமாக நோய்த் தடுப்பு நடவடிக்கையாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள், வியாபார நிறுவனங்களைத் திறக்க மாவட்ட நிா்வாகங்கள் அனுமதி அளித்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள், கடை உரிமையாளா்கள், சாலையோர வியாபாரிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா்.
இதனிடையே வங்கி, சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த மக்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல் ஜப்தி போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் வங்கிகளில் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

