மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவருக்கு ஓராண்டு சிறை

கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவருக்கு ஓராண்டு சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:28 pm

DIN

கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவருக்கு ஓராண்டு சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் மேட்டுவளவு பகுதியில் வசித்து வருபவா் குருநாதன் (60). இவா் தனது வீட்டைப் பூட்டி விட்டு மகள் வீட்டுக்கு மாா்ச் 31ஆம் தேதி சென்றுள்ளாா். அன்றிரவு அடையாளம் தெரியாத நபா் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளாா். சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினா் அந்த நபரைப் பிடித்து கோபி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா் சேலம் மாவட்டம், மல்லூரைச் சோ்ந்த கணபதி (70) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணபதியைக் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை கோபி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கணபதிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 100 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.