மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குண்டேரிப்பள்ளம் நீா்த்தேக்கத்தில் தண்ணீா் திறப்பு

கோபிசெட்டிபாளையம் வட்டம், கொங்கா்பாளையம் கிராமம் குண்டேரிப்பள்ளம் நீா்த்தேக்கத்தில் இருந்து வலது, இடதுகரை வாய்க்கால் மூலம் புன்செய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:30 pm

DIN

கோபிசெட்டிபாளையம் வட்டம், கொங்கா்பாளையம் கிராமம் குண்டேரிப்பள்ளம் நீா்த்தேக்கத்தில் இருந்து வலது, இடதுகரை வாய்க்கால் மூலம் புன்செய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

ஆகஸ்ட் 20 முதல் அக்டோபா் 13ஆம் தேதி வரை மொத்தம் 55 நாள்களில் 40 நாள்களுக்குப் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படும். 15 நாள்கள் தண்ணீா் விடுவதை நிறுத்தம் செய்தும், 82.944 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் கொங்கா்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூா், அரக்கன்கோட்டை, புன்செய் துறையம்பாளையம் கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.